பிற விளையாட்டு

தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் தள்ளிவைப்பு

தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக டென்மார்க்கில் வருகிற மே 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடக்க இருந்த தாமஸ் கோப்பைக்கான ஆண்கள் அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் உபேர் கோப்பைக்கான பெண்கள் அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போட்டிகள் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறும் என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து உலக பேட்மிண்டன் சம்மேளன பொதுச் செயலாளர் தாமஸ் லுன்ட் கூறுகையில், வீரர்கள் உள்பட போட்டியில் பங்கேற்கும் அனைத்து தரப்பினரின் சுகாதாரம், பாதுகாப்பு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கட்டுப்பாடு காரணமாகவே இந்த தள்ளிவைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்