image courtesy:twitter/@InteBNLdItalia  
டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை போராடி வெற்றி

சபலென்கா 3-வது சுற்றில் சோபியா கெனின் உடன் மோதினார்.

தினத்தந்தி

ரோம்,

ரோம் நகரில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), சோபிய கெனின் (அமெரிக்கா) உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை சோபியா கெனின் கைப்பற்றி சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் சுதாரித்து கொண்டு விளையாடிய சபலென்கா அடுத்த 2 செட்டுகளை போராடி கைப்பற்றி வெற்றி பெற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் சபலென்கா 3-6, 6-3 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இவர் 4-வது சுற்றில் மார்டா கோஸ்ட்யுக் உடன் மோத உள்ளார். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது