புதுச்சேரி,
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமாருக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. பிரகாஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்குள் எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவோம் என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசிடம் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.