இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்?... வார ராசிபலன்: செப்டம்பர் 20 முதல் 26 வரை..!

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
வார ராசிபலன்
Published on

மேஷம்

மேஷ ராசியினருக்கு புதிய உற்சாகம் பிறக்கும். பல நாளாக எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். பொருளாதார நிலையில் புதிய வருமான வழிகள் பெருகுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும்.

கணவன்-மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் உடல்நலம் சீராகும். உறவினர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். பொது வாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கை கூடிவரும். வியாபாரிகளுக்குக் கூட்டாளிகள் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

உடல் சோர்வு அல்லது தலைவலி வந்து நீங்கும். தினமும் முருகப்பெருமானை வணங்கி வருவதுடன், ஏழை எளியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வரலாம். சிவப்பு நிற வஸ்திரம் அல்லது துண்டு அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. கலை மற்றும் கல்வித்துறையில் இருப்போருக்குத் தங்கமான வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட தொகைகள் கைக்கு வந்து சேரும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பான முயற்சிகள் வெற்றியைத் தரும்.

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களின் வட்டாரம் பெரிதாகும். சமுதினத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். விருந்து மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

தொழில் ரீதியாகப் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய உகந்த காலம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும். சக பணியாளர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

உணவு செரிக்காமல் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படலாம். தினமும் மகாலட்சுமி தாயாரை வழிபட்டு வருவது நன்மைகளைத் தரும். வெள்ளிக்கிழமை தோறும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்குவது மன அமைதியைத் தந்து அதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு புதன் மற்றும் பிற கிரகங்களின் பலத்தால் மனநிறைவு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் தடையின்றி வெற்றி காண்பீர்கள். உங்களின் நீண்ட காலக் கனவுகள் நனவாகும். பண வரவு தாராளமாக இருக்கும். கடன்கள் தீரும்.

தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பும் ஆசியும் முழுமையாகக் கிடைக்கும். சகோதர வழியில் அனுகூலம் உண்டு. சமூகத்தில் உங்கள் புகழ் ஓங்கும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பலரும் உங்கள் ஆலோசனையைக் கேட்பார்கள்.

தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தை ஈட்டுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்குப் பங்குதாரர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெறலாம். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும்.

நரம்பு மண்டல உபாதை, தூக்கமின்மை ஏற்படலாம். உடலுக்குப் போதுமான ஓய்வு அளிப்பது அவசியம். பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறந்தது. பச்சை நிற ஆடைகளை அணிவது அல்லது பச்சை நிறக் கைக்குட்டை வைத்திருப்பது அதிர்ஷ்டம் அளிக்கும்.

கடகம்

கடக ராசியினருக்கு சந்திரனின் பலத்தால் மன உறுதி அதிகரிக்கும். புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை சீராக காணப்படும். தேவையற்ற விரயங்கள் கட்டுப்படுத்தப்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த நல்ல செய்திகள் வந்து சேரும். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பொது வாழ்வில் உங்களின் புகழ் பன்மடங்கு உயரும்.

உத்தியோகஸ்ர்களுக்குப் புதிய பொறுப்புகள் பாராட்டுக்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய கிளைகளைத் தொடங்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் கூடும்.

உடலில் உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் அல்லது கண் எரிச்சல் வரும். குளிர்ச்சியான உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. தினமும் சிவபெருமானை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்தது. வெள்ளை நிறப் பொருட்களை உடன் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் சூரியனின் அருளால் உங்களின் செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளில் வெற்றியடைவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் தேடி வரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும். வாழ்க்கைத்துணையின் வழியில் உதவிகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு உச்சத்தை எட்டும். பலரும் உங்களைப் பின்பற்றுவார்கள். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் பொறாமையைக் கடந்து முன்னேறுவீர்கள். மேலதிகாரிகளின் முழு நம்பிக்கையைப் பெறுவீர்கள். புதிய பதவி, ஊதிய உயர்வு கிடைக்கும். சுயதொழிலில் லாபமுண்டு.

எலும்புகளில் வலி அல்லது கால் வலி ஏற்படலாம். அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய பகவானுக்கு நீர்வார்த்து வழிபடுவது சிறந்தது. சிவப்பு நிற பொருட்களை பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைத் தரும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு அறிவுத்திறன் வெளிப்படும். கலைத்துறையில் இருப்போருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக

இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். புதிய அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டு. நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொது வாழ்வில் உங்களின் நற்பெயர் மேலோங்கும். சமுதாயத்தில் பலருக்கு உதவும் வாய்ப்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செயல்படவும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதனைச் சமாளித்து வெற்றி பெற்று மேலதிகாரிகளின் பாராட்டுக்களைத் தட்டிச் செல்வீர்கள்.

தோல் சம்பந்தமான ஒவ்வாமை அல்லது ஒற்றைத் தலைவலி வரலாம். புதன்கிழமை தோறும் சுதர்ஷனாஷ்டகம் கேட்பது அல்லது படிப்பது நன்மையைத் தரும். பச்சை நிறப் பொருள்கள் அல்லது குறிப்பேடு வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.

துலாம்

துலா ராசியினருக்கு இந்த வாரம் சுக்கிரனின் பலத்தால் வசதிகளும் வாய்ப்புகளும் பெருகும். கலை மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்களுக்குப் பாராட்டுக்கள் குியும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். புதிய ஆபரணங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்கள் உங்களைப் புகழ்ந்து பேசுவார்கள். சமூகத்தில் உங்களின் புகழ் மற்றும் கீர்த்தி ஓங்கும். கலைப் பிரியர்களுடன் நட்பு ஏற்படும்.

வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் உழைப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள்.

தொண்டை வலி அல்லது சளித் தொல்லை காரணமாகச் சிரமம் உண்டாகலாம். சுடுநீரைப் பருகுவது நலம் தரும். வெள்ளிக்கிழமை அன்று மஹாலட்சுமிக்கு மலர் அர்ச்சனை செய்வது சிறந்தது. சிறிய வெள்ளி பொருளை உடன் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு செவ்வாயின் தாக்கத்தால் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். எத்தகைய கடினமான காரியங்களையும் எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். பண வரவு தாராளமாக இருக்கும். கடன்கள் ஒரு முடிவுக்கு வரும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதக தீர்ப்பு வரும்.

குடும்பத்தில் சகோதர வழியில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்களின் உதவியால் முக்கியப் பணிகள் நிறைவேறும். பொது வாழ்வில் உங்களின் செல்வாக்கு மேலோங்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

தொழிலில் போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய கிளைகளைத் தொடங்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களை நாடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனநிறைவைத் தரும்.

ரத்த அழுத்தம் அல்லது உஷ்ண சம்பந்தமான உடல்நலக் கோளாறுகள் வரக்கூடும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம். செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது. பவள நிற பொருட்களை வைத்திருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் குருவின் அருளால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய வருமான வழிகள் திறக்கும்.

குடும்பத்தில் மங்கல காரியங்கள் கைககூடி வரும். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. சமுதாயத்தில் உங்களின் மதிப்பு மற்றும் மரியாதை உயரும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் மூலம் எதிர்கால சேமிப்பு பெருகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பார்கள். உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் உங்களை மதித்து நடப்பார்கள்.

தொடை வலி அல்லது கால் வலி போன்ற பிரச்சனைகள் வரலாம். அதிக தூரம் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வியாழக்கிழமை தோறும் சிவபெருமானை மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்தது. மஞ்சள் நிற ஆடை அல்லது பொருட்கள் அதிர்ஷ்டத்தைத் தரும்.

மகரம்

மகர ராசியினருக்கு இந்த வாரம் சனியின் நிலையால் பொறுப்புணர்வு அதிகரிக்கும். கடின உழைப்புக்குப் பின் வெற்றியை ருசிப்பீர்கள். பொருளாதார ரீதியாகச் சில புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். பண வரவு சீராக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும்.

குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கவனம் தேவை. நண்பர்களிடம் கவனமாகப் பேசவும். பொது வாழ்வில் எதிரிகளை எதிர்கொள்வீர்கள்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அதனை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் கவனமாக இருக்கவும்.

மூட்டுவலி அல்லது வாத சம்பந்தமான உடல் உபாதைகள் வரலாம். உடற்பயிற்சி, யோகா செய்வது நலம் தரும். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது. நீல நிற ஆடை அல்லது இரும்பு சாவி வைத்திருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் ராகுவின் செல்வாக்கால் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். புதுமையான சிந்தனைகள் உங்களை முன்னிலைப்படுத்தும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். திடீர் செலவுகள் வந்தாலும் அவற்றைச் சமாளிப்பீர்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். சமூகத்தில் உங்களின் வித்தியாசமான அணுகுமுறை பாராட்டு பெறும்.

தொழிலில் புதுமை புகுத்தி லாபத்தை ஈட்டுவீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலக ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது.

கால்களில் நரம்பு வலி அல்லது சோர்வு ஏற்படும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழ தீபம் ஏற்றி வழிபடுவது அனைத்துத் தடைகளையும் நீக்கும். கறுப்பு நிறப் பொருட்கள் அல்லது காந்தக் கல் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.

மீனம்

மீன ராசியினருக்கு குரு மற்றும் கேதுவின் சஞ்சாரத்தால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். பொருளாதாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும் தருணம் இது. புதிய முதலீடுகள் மூலம் வளம் பெருகும்.

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகளின் வளர்ச்சி மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். பொது வாழ்வில் புகழ் ஓங்கும். பல சமூகப் பணிகளில் முன்னின்று செயல்படுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு உறுதியாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். மேலதிகாரிகள் உங்கள் திறமையை வெளிப்படையாகப் பாராட்டுவார்கள்.

பாதங்களில் வலி அல்லது நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சனை வரலாம். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வணங்குவது உத்தமம். மஞ்சள் நிறப் பொருட்கள் அல்லது தங்கம் அதிர்ஷ்டம் அளிக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com