'பெத்தி' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த ஜெகபதி பாபு

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ளது.
'பெத்தி' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த ஜெகபதி பாபு
Published on

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 4ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எதிர்பார்த்தி ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்த படத்தின் டிரெய்லர், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில், பெத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜெகபதி பாபு சமீபத்தில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com