டோம்பிவிலியில் சிறுமி தற்கொலை- மற்றொரு சம்பவத்தில் பெண் விஷம் குடித்தார்

டோம்பிவிலியில் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். மற்றொரு சம்பவத்தில் பெண் விஷம் குடித்தார்.
டோம்பிவிலியில் சிறுமி தற்கொலை- மற்றொரு சம்பவத்தில் பெண் விஷம் குடித்தார்
Published on

தானே, 

டோம்பிவிலி துக்காராம் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் டிட்வாலாவை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை கடந்த 23-ந்தேதி இரவு ஒருவர் மானபங்கம் செய்து உள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கெலைக்கு முயன்றார். இது பற்றி அறிந்த பெற்றோர் இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசில் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக புகார் அளித்தனர். இந்த புகாரின் படி இளம்பெண்ணை மானபங்கம் செய்த நபரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com