உணவே மருந்து.. வாரம் 2 முறை மணத்தக்காளி கீரை சாப்பிடுங்க..!

சத்துக்கள் நிறைந்த மணத்தக்காளி கீரையை சிறுபருப்பு அல்லது பயத்தம்பருப்புடன் சேர்த்து மசியலாக சமைத்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியையும் வலுவையும் தரும்.
மணத்தக்காளி கீரை
மணத்தக்காளி கீரை
Published on

மணத்தக்காளி கீரை ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் 'காட்டுக்கீரை' என்று அழைக்கப்படும் இது, செரிமான மண்டலத்தைச் சீரமைப்பதில் முதன்மை வகிக்கிறது. வாய் புண், வயிற்றுப் புண் மற்றும் செரிமானக் கோளாறுகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவக் கீரை ஆகும்.

இந்த கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ,சி, இ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு, கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சத்துக்கள் நிறைந்த இந்த கீரையைச் சிறுபருப்பு அல்லது பயத்தம்பருப்புடன் சேர்த்து மசியலாக சமைத்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியையும் வலுவையும் தரும்.

தாதுக்கள் பற்றாக்குறையை நீக்கி ஆரோக்கியமான வாழ்வை தரக்கூடிய இந்த நாட்டுக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்வது நலம் பயக்கும். மணத்தக்காளி கீரையின் தனித்துவம், அது பெண்களின் கருப்பையை வலுப்படுத்துகிறது என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

100 கிராம் மணத்தக்காளி கீரையில், நீர்ச்சத்து 82 சதவீதம், புரதம் 5.9 கிராம், கொழுப்பு, ரிபோப்ளாவின் 59 மி.கி. நியாசின் 0.9 மி.கி. நிறைந்துள்ளன. நாட்டுக்கீரைகள் மிகப்பெரிய அளவில் மனிதனுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை போக்கி நோய்களையும் வரவிடாமல் தடுக்கின்றன.

Also Read
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ‘மங்குஸ்தான் பழம்’ சிறந்த தேர்வு
மணத்தக்காளி கீரை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com