புவனேஸ்வர்,
ஒடிசாவில் நேற்று ஹோலி பண்டிகை மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ணப்பொடிகளை ஒருவருக்கொருவர் பூசியபடி நடந்த இந்த கொண்டாட்டத்தில், பலர் குளிக்கச்சென்றபோது குளம், கால்வாய், அணைகளில் தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
பாலசோர் மாவட்டம் கட்டாக்கில் உள்ள மகாநதி ஆற்றில் குளித்த 2 பேர் மூழ்கினர். இதேபோல் மாநிலத்தின் பல இடங்களில் அணை, கால்வாய் மற்றும் ஆறுகளில் பெண் உள்பட 8 பேர் நீரில் மூழ்கினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
தன்கனல் மாவட்டத்தில் ஹோலி கொண்டாடிவிட்டு சென்றபோது மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல இடங்களில் கோஷ்டி மோதல் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்திலும் ஹோலி கொண்டாடிய சிறுவர்கள் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியானார்கள்.