

அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் ஜெபராஜ் (வயது 56), வெங்கடேசன் (34), பவுலின் டோமினிக் என்ற ஜெயசீலி (47) , டில்லிபாபு (47) , பிரித்விராஜ் (36) , பிரகாஷ் (28) , சக்திவேல் (22) , ஆடு என்ற சரவணன் (22) , சூர்யா (23) மாட்டு சங்கர் (38) ஆகிய 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 271 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.