ஏலச்சீட்டு நடத்தி மோசடி; 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை

மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.மோசடி செய்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.
ஏலச்சீட்டு நடத்தி மோசடி; 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை
Published on

சென்னையை அடுத்த மாதவரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் தன்னுடைய கணவர் ரவிக்குமாருடன் சேர்ந்து 2010-ம் ஆண்டு அந்த பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாகவும், பூந்தமல்லியை சேர்ந்த ராமமூர்த்தி, அவரது உறவினர் உமாமகேஷ்வரி ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி ரூ.65 லட்சமும், பூந்தமல்லியை சேர்ந்த கந்தன், அவருடைய உறவினர் பண்டேரிபாய் ஆகியோர் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.49 லட்சமும் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்குகள் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், நேற்று ஒரே நாளில் இந்த 3 மோசடி வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கினார்.

அதில் 3 மோசடி வழக்குகளிலும் தொடர்புடைய 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மோசடி செய்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com