

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு கவச உடையும் அணிந்திருந்த அவர் கொரோனா நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் நோயாளிகளுடன் அவர்களது உறவினர்கள் யாரும் தங்கி இருக்காமல் பார்த்து கொள்ளுமாறும் அரசு ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கரனை கேட்டு கொண்டார்.