புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
Published on

புதுச்சேரி,

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, பல்வேறு ஊடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் புதுச்சேரியிலும் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இதன்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகம் தொடர்பான நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் எனவும், காய்கறி கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண விழாக்களில் அதிகபட்சமாக 100 பேரும், இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 பேரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரைகளில் இரவி 10 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், வணிக வளாகங்களில் 100 சதவீதத்துடன் நள்ளிடவு வரை இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com