பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி: அருங்காட்சியகங்கள் திறப்பு

பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி: அருங்காட்சியகங்கள் திறப்பு.
பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி: அருங்காட்சியகங்கள் திறப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு அறிவித்துள்ளபடி கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் சென்னை அரசு அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம். அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள் உரிய முக கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையிடலாம். அதேபோல் வகை 2 மற்றும் 3-ல் உள்ளடங்கிய அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், காஞ்சீபுரம் மாவட்டம் மற்றும் பழனி அருங்காட்சியகங்களையும் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com