காதல் மனைவியை பார்க்க வந்தவர் மயங்கி விழுந்து சாவு

தக்கலை அருகே காதல் மனைவியை பார்க்க வந்த வாலிபர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
காதல் மனைவியை பார்க்க வந்தவர் மயங்கி விழுந்து சாவு
Published on

பத்மநாபபுரம்,

திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகன் கார்த்திக் ரெஜி (வயது 27). இவர் மினிபஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். தக்கலை அருகே வாள்வச்சகோஷ்டம் பகுதியை சேர்ந்தவர் விஜிலா (25).

இவர், கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தபோது, கார்த்திக் ரெஜியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. கார்த்திக் ரெஜிக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்காரணமாக விஜிலா, குழந்தையுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். மனைவி, குழந்தையை பார்க்க கார்த்திக் ரெஜி அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

நேற்றுமுன்தினம் கார்த்திக் ரெஜி மதுபோதையில் வழக்கம்போல் மனைவி, குழந்தையை பார்க்க வந்தார். அப்போது அவர், திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜிலா மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கார்த்திக் ரெஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் ரெஜி அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது விஷம் குடித்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com