பாளையங்கோட்டையில் வி‌ஷம் குடித்த போலீஸ்காரர் சாவு

பாளையங்கோட்டையில் திருமணம் தடைபட்டதால் வி‌ஷம் குடித்த போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
பாளையங்கோட்டையில் வி‌ஷம் குடித்த போலீஸ்காரர் சாவு
Published on

நெல்லை,

கன்னியகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இ,வருடைய மகன் ஜெபஸ்டியான் (வயது 28). இவர், கடந்த 2017ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். இவர், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் வேலை செய்து வந்தார்.

10 நாள் விடுமுறைக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பணியில் சேருவதற்காக பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தார்.

அவர் ஆயுதப்படை மைதானத்தில் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருமணம் தடை பட்ட விரக்தியால் அவர் விஷம் குடித்தது தெரியவந்தது.

ஆஸ்பத்திரியில் ஜெபஸ்டியானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com