சங்கரன்கோவில் தொழிலாளர்கள் 48 பேர் மலேசியாவில் சிக்கி தவிப்பு

உயர்மின் கோபுரம் அமைக்கும் வேலைக்கு சென்ற சங்கரன்கோவில் தொழிலாளர்கள் 48 பேர் மலேசியாவில் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்டுத்தர குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கரன்கோவில் தொழிலாளர்கள் 48 பேர் மலேசியாவில் சிக்கி தவிப்பு
Published on

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் தாருகாபுரம், தலைவன்கோட்டை, ராமசாமியாபுரம், மலையடிக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 48 தொழிலாளர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன் தனியார் நிறுவனம் மூலம் மலேசியாவுக்கு உயர்மின் கோபுரம் அமைக்கும் வேலைக்கு சென்றனர். அங்கு சென்றதும் அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, ஒரு மாதம் நல்லபடியாக சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக சாப்பாடு, ஊதியம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவர்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். மேலும் இதுபற்றி வெளியே தெரியாமல் இருப்பதற்காக அங்கு 6 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் மட்டும் எப்படியோ வீடியோ எடுத்து அதனை வாட்ஸ்-அப் மூலம் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோ காட்சியில், தாங்கள் அனைவரும் கடந்த 2 மாதங்களாக சரிவர சாப்பாடு இல்லாமல் சிக்கி தவித்து வருவதாக கண்ணீர் விட்டு கதறி அழுவது பதிவாகி உள்ளது. இதனைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஊர் மக்கள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர்.

மலேசியாவில் சிக்கி தவிக்கும் 48 பேரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com