கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு ஆத்தூர் கோர்ட்டு உத்தரவு

கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு ஆத்தூர் கோர்ட்டு உத்தரவு
Published on

தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த நத்தக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த 2014-ம் ஆண்டு தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சிவகுமார் வழக்குப்பதிவு செய்திருந்தார்.

இவர் தற்போது நீலகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார். இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்காக ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜராகுமாறு கோர்ட்டு மூலம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

ஆனால் சம்மனை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சிவ குமார் வழக்கு விசாரணைக்கு அன்றைய தினம் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com