திருச்சியில் மாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் மயங்கி விழுந்து சாவு

திருச்சியில் மாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் மயங்கி விழுந்து இறந்தார்.
திருச்சியில் மாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் மயங்கி விழுந்து சாவு
Published on

திருச்சி,

திருச்சி புத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் மரியஆரோக்கியதாஸ். இவருடைய மனைவி ஜெயமேரி(வயது 90). இவர்களுக்கு ஆல்பர்ட், ஜேம்ஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஆல்பர்ட் காதிகிராப்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜேம்ஸ் தனியார் பள்ளி ஒன்றின் தாளாளராக உள்ளார்.

ஆல்பர்ட்டின் மனைவி சுசீலா(58). இவர்களுக்கு குழந்தை இல்லை. சுசீலா கணவரோடு பாலக்கரை பகுதியில் வசித்து வந்தார். இந்தநிலையில் ஜெயமேரி முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதையடுத்து அவரது உடலை புத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அஞ்சலிக்காக வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் ஜெயமேரியின் உடலை பார்க்க சுசீலா அங்கு வந்தார். மாமியாரின் உடலை பார்த்து அதிர்ச்சியில் கண்கலங்கியபடி நின்ற அவர் சிறிதுநேரத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு காரில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சுசீலாவின் உடலும் அங்குள்ள தனியார் பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com