கொசுவர்த்தி சுருள் தீ சேலையில் பிடித்ததில் பெண் உடல் கருகினார்; காப்பாற்ற முயன்ற கணவர் சாவு

சுவாமிமலை அருகே கொசுவர்த்தி சுருள் தீ சேலையில் பிடித்ததில் பெண் உடல் கருகினார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் தீக்காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கொசுவர்த்தி சுருள் தீ சேலையில் பிடித்ததில் பெண் உடல் கருகினார்; காப்பாற்ற முயன்ற கணவர் சாவு
Published on

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே மூப்பக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கமலா (35). விவசாயி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று வீட்டில் இரவு கணவன்-மனைவி ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் வைத்திருந்த கொசுவர்த்தி சுருள் தீ எதிர்பாராதவிதமாக கமலாவின் சேலையில் பிடித்தது.

இதில் உடல் கருகி தீக்காயம் அடைந்த கமலாவை, பார்த்த மூர்த்தி தீயை அணைக்க முயன்ற போது அவர் மீதும் தீப்பிடித்தது. உடனே 2 பேரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். கமலா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com