ராதாபுரம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு

ராதாபுரம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்ததில் பெண் பலியானார். தனது மகனை பார்க்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
ராதாபுரம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
Published on

ராதாபுரம்,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் பிச்சையா. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 65). இவர்களுடைய மகன் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தை அடுத்துள்ள கும்பிகுளத்தில் வசித்து வருகிறார். மகனை பார்ப்பதற்காக வள்ளியம்மாள் நேற்று மதியம் சமூகரெங்கபுரத்தில் இருந்து பஸ்சில் புறப்பட்டுச் சென்றார். பஸ்சின் வாசல் படிக்கட்டு அருகே நின்று அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளம் ஊர் வளைவில் பஸ் திரும்பியபோது பஸ்சில் இருந்து நிலைதடுமாறி வள்ளியம்மாள் வெளியே ரோட்டில் வந்து விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com