செங்கல்பட்டு அருகே பச்சிளம் குழந்தைக்கு சூடுபோட்டு மனைவியிடம் வரதட்சணை கொடுமை கணவர் கைது

செங்கல்பட்டு அருகே பச்சிளம் குழந்தைக்கு சூடுபோட்டு மனைவியிடம் வரதட்சணை கொடுமை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு அருகே பச்சிளம் குழந்தைக்கு சூடுபோட்டு மனைவியிடம் வரதட்சணை கொடுமை கணவர் கைது
Published on

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவர் மறைமலை நகர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (28). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. போதிய வருமானம் இல்லாததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கார்த்திகேயன் வரதட்சணை கேட்டு தனது மனைவி பரமேஸ்வரியை கொடுமைப்படுத்தி வந்தார். குடிபோதையில் வீட்டுக்கு வரும் அவர் தனது பச்சிளம் குழந்தைக்கும் சிகரெட்டால் சூடு போட்டுள்ளார்.

இது குறித்து பரமேஸ்வரி தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் முறையிட்டார். ஆனால் அவர்கள் தனது மகனுக்கு ஆதரவாக செயல்பட்டு குழந்தையையும், பரமேஸ்வரியையும் அறையில் அடைத்து வைத்தனர். குழந்தையின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் அறையில் இருந்து குழந்தையுடன் வெளியேறிய பரமேஸ்வரி குழந்தையை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். வரதட்சணை கொடுமை குறித்து பரமேஸ்வரி செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சிளம் குழந்தைக்கு சூடுபோட்டது, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com