பிளஸ்-1 தேர்வில் தோல்வி, தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிளஸ்-1 தேர்வில் தோல்வி, தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
Published on

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தானிமூலா பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் சுபலட்சுமி(வயது 16). பிதிர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாமல் சுபலட்சுமி தோல்வி அடைந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சுபலட்சுமியின் பெற்றோர் குந்தலாடி கடை வீதிக்கு சென்றனர். பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீடு திரும்பினர்.

இதற்கிடையில் வீட்டில் யாரும் இல்லாததால் சுபலட்சுமி தனது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர் தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து நெலாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் தோல்வி அடைந்ததால், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com