காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்

எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் ஆலடி தெருவை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆலடி தெருவில் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் ஆலடி தெருவை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விஷ்ணு காஞ்சி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com