பிரபல ரவுடி வசூர்ராஜாவின் கூட்டாளி அதிரடி கைது, ஜெயிலில் அடைப்பு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற பிரபல ரவுடி வசூர்ராஜாவின் கூட்டாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
பிரபல ரவுடி வசூர்ராஜாவின் கூட்டாளி அதிரடி கைது, ஜெயிலில் அடைப்பு
Published on

வேலூர்,

பிரபல ரவுடி வசூர்ராஜாவின் கூட்டாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதன் விவரம் வருமாறு:-

வேலூர் ஓல்டு டவுன் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயா என்கிற உதயகுமார் (வயது 35). இவர் பிரபல ரவுடி வசூர்ராஜாவின் கூட்டாளி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை 2 குற்ற வழக்குகள் தொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் தேடி வந்தனர்.

வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் நேற்று முன்தினம் காலை வேலப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்குள்ள ஒரு திருமண மண்டபம் அருகே உதயா பதுங்கி இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் உதயாவை பிடிப்பதற்காக நெருங்கினார். அப்போது, உதயா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மிரட்டி அவரை ஆபாசமாக பேசினார். எனினும் அதனை பொருட்படுத்தாமல் உதயாவை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தராஜ் பிடிக்க முயன்றார். ஆனால் அவரை உதயா கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தராஜுக்கு கையில் கத்திக்குத்து விழுந்தது.

தகவலறிந்து வந்த சக போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக உதயா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

இதனிடையே தப்பி ஓடிய உதயா, வேலப்பாடி பகுதியில் சவாரிக்காக நின்றிருந்த ஆட்டோ டிரைவர் சிவா என்பவரை மிரட்டி ரூ.500-ஐ பறித்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை பிடிக்க முயன்றனர். எனினும் அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். இது குறித்து சிவா வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதயா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜை கொலை செய்ய முயன்றதாகவும் வழக்குப் பதிந்து உதயாவை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சங்கரன்பாளையத்தில் உள்ள ஒரு இடத்தில் அவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதயாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com