வாகனத்தில் அடிபட்டு இறந்த கீரியை எடுத்து சென்ற தந்தை-மகன் கைது

வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்த கீரியை எடுத்து சென்ற தந்தை-மகனை வனத்துறையினர் கைது செய்தனர்.
வாகனத்தில் அடிபட்டு இறந்த கீரியை எடுத்து சென்ற தந்தை-மகன் கைது
Published on

பந்தலூர்,

கூடலூர் வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, புள்ளி மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவற்றை வேட்டையாடுவது மற்றும் அவற்றுக்கு இடையூறு செய்வது வனச்சட்டத்தின்படி குற்றமாகும். இதனால் வனக்குற்றங்கள் நிகழாமல் இருக்கவும், வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பந்தலூர் அருகே மேங்கோரேஞ்சு பகுதியில் இறந்து கிடந்த கீரியை 2 பேர் எடுத்து செல்வதாக தேவாலா வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அந்த 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த குமார்(வயது 39) மற்றும் அவரது மகன் ஆனந்த் என்பது தெரியவந்தது.

மேலும் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்த கீரியை சமைத்து சாப்பிடுவதற்காக அவர்கள் எடுத்து சென்றதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர், இறந்து போன கீரியின் உடலை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com