மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து அரசு பஸ் டிரைவர் பலி

விக்கிரமசிங்கபுரம் அருகே, நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து அரசு பஸ் டிரைவர் பலி
Published on

விக்கிரமசிங்கபுரம்,

அம்பை முடப்பாலம் வடக்கு காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரம்மநாயகம் (வயது 41). இவர், பாபநாசம் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து டெப்போவில் இருந்து அவர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நள்ளிரவு 1.30 மணியளவில் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் மெயின் ரோட்டில் சென்றபோது, நாய் ஒன்று குறுக்கே ஓடியுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி ரோட்டில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பிரம்மநாயகத்திற்கு சரஸ்வதி (35) என்ற மனைவியும், சுமித்ரா (15), கார்த்திகா (11) ஆகிய 2 மகள்களும், பாலாஜி (7) என்ற மகனும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com