இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன், மாமியார் உள்பட 3 பேர் கைது

திருமுல்லைவாயல், இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன், மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன், மாமியார் உள்பட 3 பேர் கைது
Published on

ஆவடி,

திருமுல்லைவாயல் அன்னை சத்யா நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29). இவருடைய மனைவி ஜோதிஸ்ரீ (25). இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஜோதிஸ்ரீ, கணவரை விட்டு பிரிந்து கடந்த ஜனவரி மாதம் சென்னை கே.கே.நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு ஏப்ரல் மாதம் தனது சர்டிபிகேட் மற்றும் துணிமணிகளை எடுக்க கணவர் வீட்டுக்கு சென்றார். அவரை உள்ளே விட அவரது மாமியார் அம்சா(59) மறுத்தார். இதனால் மாடியில் உள்ள வீட்டில் தங்கினார். அந்த வீட்டுக்கு செல்லும் மின்சாரத்தை மாமியார் துண்டித்ததால் விரக்தி அடைந்த ஜோதிஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முன்னதாக தனது தற்கொலைக்கு கணவரும், மாமியாரும்தான் காரணம் என கடிதம் எழுதியதுடன், உறவினர்களிடம் வீடியோ காலிலும் பேசி தகவல் தெரிவித்தார். இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது. விசாரணையில் ஜோதிஸ்ரீயின் தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் பாலமுருகன், மாமியார் அம்சா மற்றும் பாலமுருகனின் அண்ணன் சத்யராஜ் (35) ஆகியோர் காரணம் என உறுதியானது. 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com