டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு: ஜம்மு காஷ்மீரின் 6 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

ஜம்மு காஷ்மீரின் 6 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு: ஜம்மு காஷ்மீரின் 6 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
Published on

ஸ்ரீநகர்,

2025-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில், தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்று (மார்ச் 23, 2026) ஜம்மு காஷ்மீரின் 6 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஸ்ரீநகர், பாரமுல்லா, ஜம்மு, குல்காம், காந்தர்பால் மற்றும் ஹந்த்வாரா மாவட்டங்களில் உள்ள மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. சோதனையின் போது லேப்டாப்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Also Read
உ.பி.: கட்டிடம் சரிந்ததில் சிக்கி 4 பேர் பலி; பிரதமர், முதல்-மந்திரி இழப்பீடு அறிவிப்பு
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு: ஜம்மு காஷ்மீரின் 6 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் மூளையாக கருதப்படும் உமர் உன் நபி (அல் ஃபாலா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனைகள் மூலம் சதியில் தொடர்புடைய மற்ற நபர்கள் மற்றும் அவர்களின் வலையமைப்பை கண்டறிய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com