டெல்லி விமான நிலையத்தில் மிக அதிக அளவாக ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

டெல்லி விமான நிலையத்தில் மிக அதிக அளவாக 3 தஜிகிஸ்தான் நாட்டினரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
டெல்லி விமான நிலையத்தில் மிக அதிக அளவாக ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
Published on

புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பேர் கடந்த 21-ந்தேதி பயணிகளாக வந்தடைந்தனர்.

அவர்கள் 3 பேரும் இஸ்தான்புல் நகருக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அவர்களிடம் நடந்த சோதனையில், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றில் 7.2 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 4 லட்சத்து 66 ஆயிரத்து 200 யூரோக்கள் என மொத்தம் இந்திய மதிப்பில், 10 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுவரை இல்லாத வகையில் இது மிக அதிக அளவாகும். அவற்றை சுங்க சட்டம், 1962, பிரிவு 110-ன் கீழ் அதிகாரிகள் கைப்பற்றி, தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com