

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி டெல்லி வந்துள்ள கம்போடிய பிரதமர் சாம்டெக் ஹுன்சென் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, விவசாயம், சுற்றுலா மற்றும் கலாசாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதித்தனர். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகள் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
குற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் புலன் விசாரணை, உயர்மட்ட ராணுவ அதிகாரி ஒருவரை மாற்றிக்கொள்வது உள்ளிட்ட ராணுவ ஒப்பந்தம், ஆள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை மற்றும் மீட்பு, கலாசார பரிமாற்றம் ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதுதவிர கம்போடியாவில் நீராதார மேம்பாட்டு திட்டத்துக்கு இந்தியா சுமார் ரூ.235 கோடி கடன் வழங்குவது என்றும் முடிவானது.