டெல்லியில் இன்று கொண்டாடப்படும் தேசிய வாக்காளர் தினம் - ஜனாதிபதி கலந்து கொள்கிறார்

2023-ம் ஆண்டிற்கான சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான விருதுகளை ஜனாதிபதி இன்று வழங்க உள்ளார்.
டெல்லியில் இன்று கொண்டாடப்படும் தேசிய வாக்காளர் தினம் - ஜனாதிபதி கலந்து கொள்கிறார்
Published on

புதுடெல்லி,

இந்திய தேர்தல் ஆணையத்தின் 14-வது தேசிய வாக்காளர் தினம் டெல்லியில் இன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரெளபதி முர்மு கலந்து கொள்கிறார்.

மேலும் மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது, 2023-ம் ஆண்டிற்கான சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்க உள்ளார்.

தொடர்ந்து '2024 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தின் முன்முயற்சிகள்' என்ற நூல் தொகுப்பின் முதல் பிரதியை ஜனாதிபதியிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வழங்குகிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் தயாரித்த 'எனது வாக்கு எனது கடமை' என்ற வாக்காளர் விழிப்புணர்வு குறும்படமும் இந்த நிகழ்ச்சியின்போது திரையிடப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com