கேரளத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் - தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைப்பு!

டெல்லி தடியடி சம்பவத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கேரளத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் -  தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைப்பு!
Published on

திருவனந்தபுரம்,

நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் மீது தடியடி

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது தடியடி நடத்தப்பட்டதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லி போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து, கேரளத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற எஸ்எப்ஐ அமைப்பினரின் பேரணியையும் காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்தனர்.

போராட்டம் தீவிரம்

இதற்கிடையில், நீட் விவகாரம் தொடர்பாக பல மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com