தெலுங்கானா: பி.ஆர்.எஸ். தலைவர் கவிதா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா: பி.ஆர்.எஸ். தலைவர் கவிதா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக கவிதாவிடம் ஏற்கனவே சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com