பயங்கரவாதம் உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஜெய்சங்கர்

பயங்கரவாதம் உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
பயங்கரவாதம் உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஜெய்சங்கர்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ரஷிய தூதரகத்தில், இரண்டாம் உலகப்போர் வெற்றி விழா நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:-

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. பயங்கரவாதம், இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தல். அதை நாம் ஒருபோதும் சகித்து கொள்ளக்கூடாது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வரும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி.

1945-ம் ஆண்டு பாசிசத்திற்கு எதிரான போரில் வெற்றியின் முக்கியத்துவம் ஒரு முக்கியமான ஒன்றாகும். இந்த வரையறுக்கும் நிகழ்வில் இந்தியர்கள் ஆற்றிய பங்களிப்பு நன்கு அறியப்பட்டதாகும். சர்வதேச ஒத்துழைப்பு முன்பைவிட இப்போது மிகவும் முக்கியமானது. உலகப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது, உலகம் அதன் இயற்கை பன்முகத்தன்மைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com