தேசிய செய்திகள்
திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்; பயனாளர்கள் அவதி
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது.
டெல்லி,
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது. இந்த சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 7 மணி முதல் வலைதளம் முடங்கியுள்ளது.
பயனாளர்களின் எக்ஸ் வலைதள முகப்பு பக்கம், பிற எக்ஸ் வலைதள கணக்குகளை காண்பிக்கும் பக்கம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் முடங்கியுள்ளது. இதனால் பயனாளர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

