மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் திருடிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
Published on

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது 25). கூலி தொழிலாழி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சீதஞ்சேரி பஜார் வீதிக்கு சென்றார். அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இது குறித்த அவர் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை உத்தரவின் பெயரில் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தை சேர்ந்த விஸ்வா (19), கில்பர்ட் கிரேஸ் ராஜ் (19), தங்கதுரை (20) என்ற வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிந்தது. இந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் திருவள்ளூர், புல்லரம்பாக்கம், பென்னாலூர் பேட்டை ஆகிய பகுதிகளில் 3 மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது. அந்த 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 வாலிபர்களையும் போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com