

சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 9 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6,572 ஆண்கள், 4,369 பெண்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் வெளிநாட்டில் இருந்து வந்த இருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 406 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,499 முதியவர்களும் இடம்பெற்று உள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 3,347 பேரும், செங்கல்பட்டில் 970 பேரும், கோவையில் 735 பேரும், திருவள்ளூரில் 535 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 26 பேரும், பெரம்பலூரில் 8 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரத்து 848 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 2 ஆயிரத்து 392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 5 ஆயிரத்து 147 ஆண்களும், 3 லட்சத்து 97 ஆயிரத்து 209 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 36 ஆயிரத்து 324 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 39 ஆயிரத்து 731 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேரும் என 44 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர்.
இதில் சென்னையில் 15 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், கடலூர், காஞ்சீபுரத்தில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, நெல்லையில் தலா இருவரும், கோவை, திருவள்ளூர், திருச்சி, திருப்பத்தூர், தென்காசியில் தலா ஒருவரும் என 15 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 157 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6,172 பேர் நேற்று டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,935 பேரும், செங்கல்பட்டில் 725 பேரும், கோவையில் 618 பேரும் அடங்குவர். இதுவரையில் 9 லட்சத்து 14 ஆயிரத்து 119 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 75 ஆயிரத்து 116 பேர் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.