வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பு

வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பு
வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பு
Published on

பாபநாசம் தாலுகா இளங்காரக்குடி மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சவுந்தரராஜன் (வயது60). விவசாயி. நேற்று இவரது வீட்டுக்குள் சாரைப்பாம்பு திடீரென புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சவுந்தரராஜன் உடனடியாக பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை சாக்குப்பையில் போட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com