

சேலம்,
தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் திறந்த வாகனத்தில் நின்றவாறு எடப்பாடி தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.