செல்போன் திருடியவர் கைது

செல்போன் திருடியவர் கைது
Published on

ஓசூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அலங்காநல்லூரை சேர்ந்தவர் ஜெகன் (வயது 31). இவர் ஓசூர் குமுதேப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர் தனது வீட்டில் செல்போனை சார்ஜரில் போட்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் செல்போனை திருட முன்றார். இதை பார்த்த ஜெகன் அவரை பிடித்து ஓசூர் அட்கோ போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சூளகிரி அருகே உள்ள பீர்ப்பள்ளியை சேர்ந்த செங்கதிர் என்கிற சங்கர் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com