சூளகிரி அருகேசாராயம் விற்ற 2 பேர் கைது

சூளகிரி அருகேசாராயம் விற்ற 2 பேர் கைது
Published on

ஓசூர்:

சூளகிரி அருகே உள்ள கிராமங்களில் சாராயம் காய்ச்சி விற்பதாக ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நரிக்குட்டை, பஸ்தலபள்ளி ஆகிய கிராமங்களில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி விற்ற நரிக்குட்டையை சேர்ந்த முனியப்பன் (வயது 37) மற்றும் பஸ்தலப்பள்ளி பகுதியை சேர்ந்த முருகன் (57) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 155 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com