டெல்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதல்: மன்னார்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பல்வேறு மாணவர் அமைப்புகள் விடுத்துள்ள நாடு தழுவிய போராட்ட அழைப்பின் ஒரு பகுதியாகவே மன்னார்குடியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மன்னார்குடியில் மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்
Published on

திருவாரூர்,

டெல்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

டெல்லி வன்முறை

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தடியடி போன்ற தாக்குதல்கள் நடத்தினர்.

இதனைக் கண்டிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசின் செயலுக்கு மன்னார்குடி மாணவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வகுப்புகள் புறக்கணிப்பு- போராட்டம்

மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வகுப்புகளைப் புறக்கணித்தனர். மேலும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே திரண்ட மாணவர்கள், டெல்லி போலீசாருக்கு எதிராகவும், மாணவர் நலனைப் பாதுகாக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

நாடு தழுவிய ஆதரவு

பல்வேறு மாணவர் அமைப்புகள் விடுத்துள்ள நாடு தழுவிய போராட்ட அழைப்பின் ஒரு பகுதியாகவே மன்னார்குடியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மன்னார்குடி கல்வி நிறுவனப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com