தீராத வயிற்று வலியால் சைக்கிள் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை

தீராத வயிற்று வலியால் சைக்கிள் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தீராத வயிற்று வலியால் சைக்கிள் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை
Published on

கரூர் தாந்தோணிமலை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் நாகேஸ்வரன்(வயது 37). இவருக்கு திருமணமாகி ரஞ்சினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்த நாகேஸ்வரன் கடந்த 5 ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து நாகேஸ்வரன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி தீரவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நாகேஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனே இதுகுறித்து தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com