பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கூடாது: அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் விஜய் அறிவுறுத்தல்

பயணிகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாத வகையில் மாற்று வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்பதே முதல் அமைச்சர் விஜய் நோக்கம் என கூறப்படுகிறது.
விஜய்
விஜய்
Published on

தமிழக முதல் அமைச்சர் விஜய், பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதற்காக நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, துறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற போக்குவரத்துத் துறை ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 2,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை உடனடியாக கொள்முதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், புதிய குளிர்சாதன பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதனை காரணமாகக் கொண்டு பயணிகளின் பேருந்து கட்டணத்தை எந்த சூழலிலும் உயர்த்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், கட்டண உயர்வைத் தவிர்த்து மாற்று வழிகளில் போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களுக்கு தரமான, வசதியான மற்றும் நவீன போக்குவரத்து சேவையை வழங்குவதுடன், புதிய குளிர்சாதன பேருந்துகளை அறிமுகப்படுத்தி, பயணிகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாத வகையில் மாற்று வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம் என கூறப்படுகிறது. இதற்காக பேருந்துகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் விளம்பரங்கள் அமைத்தல், பயணச்சீட்டுகளின் (டிக்கெட்) பின்புறத்தில் விளம்பரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான திட்டங்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com