வரி வசூலை அதிகரிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டம்


வரி வசூலை அதிகரிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 Feb 2025 10:18 AM IST (Updated: 6 Feb 2025 11:19 AM IST)
t-max-icont-min-icon

நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.5,000 மேல் சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள 2 லட்சம் பேருக்கு கியூ ஆர் கோடு நோட்டீஸ் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கியூ ஆர் கோடு மூலம் நிலுவையில் உள்ள வரியை செலுத்தலாம் என்றும், நீண்டகாலமாக வரி பாக்கி வைத்துள்ள 2 லட்சம் வணிக கட்டிடங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story