சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் 5 மாநகராட்சிகளில் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு தொடரும் - தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் 5 மாநகராட்சிகளில் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் 5 மாநகராட்சிகளில் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு தொடரும் - தலைமைச் செயலாளர் உத்தரவு
Published on

சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சில நகர்ப்புறங்களில் ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்தி 24-ந்தேதியன்று அரசு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 26-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 29-ந்தேதி (நேற்று) இரவு 9 மணிவரையும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 26-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 28-ந்தேதி இரவு 9 மணிவரையும் முழு ஊரடங்கு நீடிக்கும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு முடிந்துவிட்டாலும், ஏற்கனவே மே 3-ந்தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ள முந்தைய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை அமல்படுத்த வேண்டும்.

மேலும், கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா தொற்று மேலாண்மையை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com