

சேலம்,
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்-அமைச்சர் விஜய் தான் களவாணி. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் விஜய் கரூர் நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசும்போது தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கூறினார். அவர் வகிக்கும் பதவியில் இருந்து இவ்வாறு பேசுவது அழகல்ல. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்-அமைச்சர் விஜய் தான் களவாணி.
தமிழகத்தில் 60 நாள் த.வெ.க. ஆட்சியில் செய்தது என்ன. ஒன்றும் செய்யவில்லை. 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய் நாற்காலியின் ஒரு கால் இறவல் கால். வேறு கூட்டணியில் வென்றவர்கள் தான் த.வெ.க.வுக்கு உறுதுணையாக உள்ளனர்.
தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி என்பது கட்டுக்கதை. தீயசக்தி தி.மு.க. என்பதுதான் எனது நிலைப்பாடும். தி.மு.க. எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறோம். முதல்-அமைச்சர் விஜய் இதுவரை ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.