வாலாஜாபாத் ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழா

காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
வாலாஜாபாத் ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழா
Published on

தமிழக அரசின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள், காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூர் வட்டார மருத்துவமனையில் பதிவு செய்து சிகிச்சை பெற்று வரும் 150 கிராமப்புற கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.க.செல்வம், காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், ஒன்றிய செயலாளர் படு நெல்லி பி.எம். பாபு, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ், மாவட்ட திட்ட அலுவலர் மு.கிருஷ்ணவேணி, வாலாஜாபாத் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பா. கல்யாணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சி.சுசித்ரா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com