தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது- இன்று 434 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது- இன்று 434 பேருக்கு தொற்று உறுதி
Published on

சென்னை,

தமிழக மாவட்டங்களில் முறையான நடவடிக்கைகளாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் புதிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 447 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10.108 -ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 309பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5947-ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் 359-பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2599- ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com