ரூ.34½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் நேற்று ரூ.34½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
ரூ.34½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on

பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்றும் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 1,100 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

ரூ.34 லட்சத்துக்கு விற்பனை

ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 200 முதல் ரூ.7 ஆயிரத்து 399 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 370 முதல் ரூ.5 ஆயிரத்து 30 வரையிலும் ஏலம் போனது. இந்த பருத்தி மூட்டைகள் ரூ.23 லட்சத்துக்கு 50 ஆயிரத்திற்கு விற்பனையானது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். நேற்று ஏலத்திற்கு டி.சி.எச். ரக பருத்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 544 மூட்டைகள் வரத்து வந்தது. பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 299 முதல் ரூ.7 ஆயிரத்து 299 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com